;
Athirady Tamil News

இளவரசி கேட்டுக்கு அறுவை சிகிச்சை செய்ய மற்றொரு நாட்டிலிருந்து பறந்து வந்த மருத்துவர்கள்: தற்போது வெளியாகியுள்ள செய்தி

0

பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டனுக்கு இந்த ஆண்டு ஜனவரி மாதம் உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. அதற்காக அவர் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக மட்டும் செய்திகள் வெளியாகின.

ஆனால், அந்த அறுவை சிகிச்சை தொடர்பான எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை. ஆனால், தற்போது, அந்த அறுவை சிகிச்சையை செய்த மருத்துவர்கள் யார் என்பது குறித்த ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

வேறொரு நாட்டிலிருந்து பறந்து வந்த மருத்துவர்கள்

இளவரசி கேட்டுக்கு அறுவை சிகிச்சை செய்தவர்கள், இத்தாலி நாட்டு மருத்துவர்கள். அவர்கள், போப் பிரான்சிஸுக்கு அறுவை சிகிச்சை செய்த அதே குழுவினர் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

ரோமிலுள்ள பிரபலமான Gemelli Clinic என்னும் மருத்துவமனையின் மருத்துவர்கள்தான் இளவரசி கேட்டுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார்கள். அவர்கள் இளவரசி கேட்டுக்காக லண்டனிலுள்ள மருத்துவமனைக்கு பறந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.