;
Athirady Tamil News

ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வெட்டிக்கொலை! தூக்கில் தொங்கிய நபர் – அதிர்ச்சி சம்பவம்

0

இந்திய மாநிலம் சத்தீஸ்கரில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டதும், ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சத்தீஸ்கர் மாநிலம் தர்கான் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில், குடும்ப நபர்கள் கொல்லப்பட்டதாக பொலிஸாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், வீட்டினுள் சென்று பார்த்தபோது பேரதிர்ச்சி காத்திருந்தது.

ஆண், பெண் மற்றும் குழந்தை என 5 பேர் கோடரியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தனர். மேலும், மனோஜ் சாஹு என்பவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையிலும் மீட்கப்பட்டார்.

அவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய பொலிஸார், வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

அப்போது கொல்லப்பட்டவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஹேம்லால் சாஹு (55), அவரின் மனைவி ஜக்மோதி சாஹு (50), அவர்களின் மகள்கள் மீரா (30), மம்தா (35) மற்றும் பேரன் ஆயுஷ் (5) என்பது தெரிய வந்தது.

அத்துடன் மனோஜ் சாஹு அவர்களை கோடரியால் வெட்டிக் கொன்றுவிட்டு, தானும் தூக்கிட்டு உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.