;
Athirady Tamil News

பரபரப்பான சாலையில் நெருப்பு கோளமான லண்டன் பேருந்து: பதறவைக்கும் காட்சிகள்

0

மேற்கு லண்டனில் உள்ள பரபரப்பான தெரு ஒன்றில் சனிக்கிழமை பிற்பகல் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தடம் எண் 490
மேற்கு லண்டனில் Twickenham பகுதியில் நடந்த இச்சம்பவத்தை அடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

தடம் எண் 490 பேருந்தானது ரிச்மண்ட் சாலையில் வைத்து உள்ளூர் நேரப்படி 13.20 மணியளவில் தீ விபத்தில் சிக்கியுள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்திலொ எவரும் காயமடையவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவத்தை அடுத்து எஞ்சிய நாள் முழுவதும் சாலை மூடப்பட்டுள்ளது. அத்துடன் விசாரணைகள் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து தீ விபத்தில் சிக்கிய தகவல் அறிந்ததும் 5 தீயணைப்பு வாகனங்களும் 30 வீரர்களும் சம்பவயிடத்தில் திரண்டுள்ளனர்.

தப்பிய பயணிகள்
சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவயிடத்திற்கு வந்து சேரும் முன்னரே, பயணிகள் மற்றும் சாரதி உள்ளிட்டவர்கள் பேருந்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.

தடம் எண் 490 பேருந்தானது ரிச்மண்ட் நிலையத்தில் இருந்து ஹீத்ரோ முனையம் 5 வரையில் செல்லும் பேருந்தாகும். தீ விபத்தின் போது பயணிகள் அந்த பேருந்தில் இருந்துள்ளனர். ஆனால் அபாயம் ஏற்படும் முன்னரே அனைவரும் வெளியேறியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.