;
Athirady Tamil News

குறைவடைந்த சாதிக்காய் விலை: வெளிநாட்டு செலாவணியில் பாரிய வீழ்ச்சி

0

இலங்கைக்கு வெளிநாட்டுச் செலாவணியைப் பெற்றுத் தரும் முக்கிய ஏற்றுமதி விவசாய உற்பத்தியான சாதிக்காயின் (Nutmeg) விலை பாரியளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதால் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக கண்டி (Kandy) மாவட்ட விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் மொத்த சாதிக்காய் உற்பத்தியின் 80 சதவீதம் கண்டி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது.

இருந்தபோதும் விலையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் அவர்களுடைய வாழ்வாதாரம் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.

2936 ஹெக்டேயர் நிலத்தில்
ஏற்றுமதி விவசாய திணைக்களம் பெற்றுத் தந்துள்ள தரவுகளின்படி 2022ஆம் ஆண்டு நாட்டில் 2936 ஹெக்டேயர் நிலத்தில் சாதிக்காய் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை 476.06 மெட்ரிட் தொன் சாதிக்காய் உற்பத்தியை ஏற்றுமதி செய்ததன் மூலம் 2022இல் பெறப்பட்டுள்ள வெளிநாட்டு செலாவணி 797.18 மில்லியன் ரூபாயாகும்.

இருந்தபோதும் சில மாதங்களுக்கு முன் 1300 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ சாதிக்காயின் விலை தற்போது 700 ரூபாயாக குறைந்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

உற்பத்திக்கு அதிக செலவீனம்
அத்துடன் சாதிக்காய் உற்பத்திக்கு அதிக செலவீனம் ஏற்படுவதாகவும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டினர்.

இந்த நிலையில், சாதிக்காய் உற்பத்தி மூலம் பெறப்பட்ட வருமானத்தில் பாரிய வீழ்ச்சியை காண முடிவதாகவும் இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கு தீர்வாக அரசாங்கம் முன்வந்து சலுகைகளை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கேட்டுக்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.