;
Athirady Tamil News

இலங்கை மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! அவதானம்

0

இலங்கை கடற்பகுதிக்குள் சிறிய படகுகளின் ஊடாக மீன்பிடியில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு கடற்றொழில் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இன்றையதினம் நண்பகல் 12.00 மணியில் இருந்து மீள் அறிவித்தல் வரும் வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடலில் ஏற்படும் காலநிலை மாற்றங்களைக் கருத்திற்கொண்டு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த 24 மணித்தியாலங்களில் இலங்கையில் பல மாகாணங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கிடையில், எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குப் பிறகு மழையுடனான வானிலை குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.