;
Athirady Tamil News

யாழில் வீசிய காற்றால் முழுமையாக சேதமடைந்த கோவில் கூரை

0

யாழ்ப்பாணத்தில் (jaffna) உள்ள ஆலயம் ஒன்றின் கூரை நேற்று மழையுடன் வீசிய காற்று காரணமாக முழுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலை யாழ்ப்பாண அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

உயிராபத்துக்கள் ஏற்படவில்லை
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், வேலணை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/21 கிராம சேவகர் பிரிவில் உள்ள ஆலயம் ஒன்றின் கூரையே இவ்வாறு சேதமடைந்துள்ளது.

இருப்பினும் உயிராபத்துக்கள் எவையும் ஏற்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.