;
Athirady Tamil News

தொடரும் போர் பதற்றம்: ரஷ்யா உக்ரைன் மீது நவீன ஏவுகணை தாக்குதல்

0

ரஷ்யாவின்(Russia) ஆக்கிரமிப்பில் உள்ள கிரீமியா பெல்கோரட் மற்றும் கிரான்ஸ்னடர் ஆகிய ரஷ்யா பகுதிகளை குறிவைத்து உக்ரைன்(Ukraine) இராணுவம் நவீன ஏவுகணைகளை வீசியும், ஆளில்லா விமானங்கள் அனுப்பியும் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஸ்ய உக்ரைன் போரானது 3 ஆண்டுகளாக தொடர்ந்து வருகின்ற நிலையில், இருநாடுகளின் இராணுவமும் தாக்குதலை அதிகரித்து வருவதால் போர் தீவிரம் அடைந்து வருகிறது.

இன்றுவரை முடிவுப்பெறாத இந்த யுத்தத்திற்கு மத்தியில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

தீவிரமடையும் போர்
இதில், ரஷ்யாவின் வான்பரப்பினுள் ஊடுருவி தாக்குதல் நடத்த முயன்ற உக்ரைன் இராணுவ தளவாடங்களை ரஷ்யாவின் இராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

அந்தவகையில் 9 ஏவுகணைகள், 61 ஆளில்லா விமானங்களை ரஷ்யாவின் வான்பாதுகாப்பு தளவாடங்கள் வானில் இடைமறித்து தகர்த்தெறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.