;
Athirady Tamil News

இந்தியாவில் ISIS அமைப்புடன் தொடர்புடைய 4 பேர் கைது

0

இந்தியாவின் அகமதாபாத் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த சில நாட்களுக்குப் பிறகு, ISIS பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ISIS அமைப்புடன் தொடர்புடைய இலங்கையர்கள் கைது
கைது செய்யப்பட்ட நால்வரும் இலங்கையர்கள் எனவும் அவர்கள் இஸ்லாமிய அரசுடன் தொடர்புடையவர்கள் என்றும் குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

முதற்கட்ட விசாரணையில் குறித்த நான்கு பேரும் இலங்கையில் இருந்து சென்னை வழியாக அகமதாபாத் சென்றதாக தெரியவந்துள்ளது.

அவர்கள் திட்டமிட்டுள்ள செயலை செய்வதற்கு முன்பே குஜராத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் சந்தேகநபர்கள் பாகிஸ்தானில் உள்ள தங்களின் உத்தரவுக்காக காத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.