;
Athirady Tamil News

உலக பணக்காரர்கள் பட்டியலில் முன்னேறிய ரிஷி சுனக்

0

சண்டே டைம்ஸ் வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் பட்டியலில் 651 மில்லியன் பவுண்டுகள் சொத்துக்களுடன் 245வது இடத்திற்கு பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்- அக்ஷதா தம்பதியினர் முன்னேறியுள்ளனர்.

ரிஷி சுனக்- அக்ஷதா தம்பதியினர் கடந்த ஆண்டு 275-வது இடத்தில் இருந்துள்ளனர்.எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அக்ஷதா மூர்த்தியின் வருமானம் அவரது கணவரின் வருமானத்தை விட அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

பெப்ரவரியில் வெளியிடப்பட்ட நிதிநிலை அறிக்கைகளின் படி, ரிஷி சுனக் 2022-23 இல் ஜிபிபி 2.2 மில்லியனை ஈட்டியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

அக்ஷதா மூர்த்தியின் தந்தை நாராயண மூர்த்தியின் ஐ.டி. நிறுவனமான இன்ஃபோசிஸில் அக்ஷதா பங்கு வைத்திருப்பதே இவர்களின் சொத்து மதிப்பு உயர்வதற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்போசிஸில் உள்ள பங்குகள் ஒரு வருடத்திற்குள் 108.8 மில்லியன் பவுண்ட்கள் அதிகரித்து கிட்டத்தட்ட 590 மில்லியன் பவுண்ட்கள் உயர்ந்துள்ளன.

இதேவேளை இளவரசர் சார்லஸின் சொத்து மதிப்பு இந்த ஆண்டு 610 மில்லியன் பவுண்ட்களாக அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.