;
Athirady Tamil News

Toothpaste என நினைத்து எலிபசையில் பல் துலக்கிய பெண்! அடுத்து நேர்ந்த சோகம்

0

தமிழக மாவட்டம் திருச்சியில் பெண்ணொருவர், பற்பசை என நினைத்து எலி பசையில் பல் துலக்கியதால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

திருச்சியின் கே.சாத்தனூரைச் சேர்ந்தவர் ரேவதி (27). திருமணமான இவர் வீட்டு வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் ரேவதி தூக்க கலக்கத்தில் தவறுதலாக எலிபசையைக் கொண்டு பல் துலக்கியுள்ளார்.

பின்னர் வேலைக்கு சென்ற அவர், மாலை வீடு திரும்பியதும் வாந்தி எடுத்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெண்ணொருவர் தூக்க கலக்கத்தில் எலி பசையில் பல் துலக்கியதால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.