;
Athirady Tamil News

வெள்ளத்தில் மூழ்கியுள்ள கொழும்பு – புத்தளம் தொடருந்து பாதை

0

நாட்டில் நிலவி வரும் கடும் மழை காரணமாக கொழும்பு தொடக்கம் புத்தளம் வரையான தொடருந்து பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக இலங்கை தொடருந்து சேவைகள் திணைக்களம் (SL Railways) தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, இன்று (21.05.2024) கொழும்பிலிருந்து (Colombo) புத்தளம் (Puttalam) வரையான தொடருந்து மார்க்கத்தில் பயணிக்கும் தொடருந்துகளின் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடருந்து சேவை
மேலும், குறித்த தொடருந்து மார்க்கத்தில் நாளொன்றுக்கு நான்கு தொடருந்துகள் சேவையில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.