;
Athirady Tamil News

பம்பலப்பிட்டியில் சரிந்து வீழ்ந்த பாரிய விளம்பரப்பலகை

0

கொழும்பு (Colombo) பம்பலப்பிட்டி பகுதியில் வீசிய பலத்த காற்றினால் பாரிய விளம்பரப்பலகை ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது.

குறத்த சம்பவமானது நேற்று (20) மாலை இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், அதிர்ஷ்டவசமாக எந்தவொரு உயிர்சேதமும் ஏற்படவில்லை எனினும் விளம்பரப்பலகை பொருத்தப்பட்டிருந்த இடத்திற்கு அருகாமையில் இருந்த கடைகளின் மேற்கூரைகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம்
இதேவேளை, பலத்த காற்றினால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று மின்சார தடை ஏற்பட்டிருந்த நிலையில் நாட்டில் தென்மேல் பருவப்பெயர்ச்சிக்குரிய காலநிலை படிப்படியாக இலங்கையை ஊடறுப்பதனால் நிலவுகின்ற காற்றுடன் கூடிய மழையுடனான வானிலை தொடரக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்தோடு, இன்றையதினம் (21) மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும், இதனால் நாட்டுமக்களை அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.