;
Athirady Tamil News

லண்டனில் திறக்கப்பட்டுள்ள இலங்கை உணவகமொன்றின் புதிய கிளை

0

லண்டனில் உள்ள தலைசிறந்த இலங்கை உணவகமான கொழும்பு கிச்சனின்(Colombo Kitchen) புதிய கிளை ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் உள்ள இலங்கை உணவை விரும்பும் மக்கள், இந்த உணவகத்தைத் தேடி வரும் அளவுக்கு அங்கு சுவையான இலங்கை உணவு கிடைக்கும் என அந்த உணவகத்தின் வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இம்மாதம் Colombo Kitchen, தெற்கு லண்டனிலுள்ள புட்னியில்(Putney) புதிய கிளை ஒன்றை ஆரம்பித்துள்ளது.

இலங்கை உணவகம்
“எங்கள் உணவகத்துக்கு வருபவர்கள், தாங்கள் லண்டனின் பல பகுதிகளிலிருந்தும், ஏன், வெளிநாடுகளிலிருந்தும்கூட எங்கள் உணவகத்துக்கு வருவதாக கூறும்போது அதை கௌரவமாக கருதுகிறேன்.” என அவ் உணவகத்தின் உரிமையாளரும் தலைமை சமையல் கலை நிபுணருமான சில்வியா பெரேரா( Sylvia Perera) தெரிவித்துள்ளார்.

எனவே தான் மேலும் பலர் எங்கள் பாரம்பரியத்தைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் எங்கள் உணவகத்தின் இரண்டாவது கிளையைத் திறப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.