;
Athirady Tamil News

பொலிஸ் அதிகாரியை கடத்தி சென்று நிர்வாணமாக்கி தாக்குதல்! பொலிஸ் சார்ஜன்ட் உட்பட 5 பேர் கைது!

0

நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரியை கடத்தி தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 24 ஆம் திகதி இரவு குறித்த பொலிஸ் நிலையத்தில் பணிநேரம் நிறைவு செய்து தமது வீட்டை நோக்கிப் பயணித்த சந்தர்ப்பத்தில் இனங்தெரியாத நபர்களால் பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பின்னர் அவர் பாரவூர்தி ஒன்றில் கடத்திச் செல்லப்பட்டு வீடொன்றில் தடுத்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, அவரின் கைபேசி மற்றும் பணம் என்பனவும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

பின்னர் இவ் விடயம் தொடர்பில் சந்தேகநபரான அதே பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் சார்ஜன்ட் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபரான பொலிஸ் சார்ஜன்டின் மனைவி செய்த முறைப்பாடு ஒன்றை தாக்குதலுக்கு இலக்கான பொலிஸ் சார்ஜன்ட் விசாரணை நடத்தியமையே இந்த சம்பவத்திற்கான பிரதான காரணமாகும் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபரான பொலிஸ் சார்ஜன்டினால் தமக்கு தாக்குதல் நடத்தப்படுவதாக தெரிவித்து குறித்த பெண் முறைப்பாடளித்துள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கான பொலிஸ் அதிகாரி தமக்கு பாதகமான வகையில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்து, சந்தேகநபரான பொலிஸ் சார்ஜன்ட் இந்த தாக்குதலை திட்டமிட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.