;
Athirady Tamil News

3 நாட்களில் உயிரை பறிக்கும்; பயங்கர புதுவகை வைரஸ் – உருவாக்கிய சீன விஞ்ஞானிகள்!

0

3 நாட்களில் உயிரை கொல்லும் புதிய வைரஸை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

புதுவகை வைரஸ்
சீனாவின் ஹெபெய் மருத்துவ பல்கலை விஞ்ஞானிகள் எபோலாவின் சில பகுதிகளை பயன்படுத்தி ஒரு புதிய வைரஸை வடிவமைத்துள்ளனர். நோய் தொடர்பான ஆய்வுக்காக இந்த நோய்க்கிருமி உருவாக்கப்பட்டுள்ளது.

இது செல்களைப் பாதித்து மனித உடல் முழுவதும் விரைந்து பரவும். எபோலா பாதித்தவர்களிடம் காணப்படுவதைப் போன்ற உறுப்பு செயலிழப்பும் ஏற்படும். இதனை ஐந்து பெண்கள் மற்றும் ஐந்து ஆண்கள் உட்பட சிரிய வெள்ளெலிகளின் குழுவில் தங்கள் சோதனைகளை நடத்தினர்.

எபோலா பாதிப்பு
பொறிக்கப்பட்ட வைரஸுடன் ஊசி போடப்பட்ட பிறகு, மூன்று நாட்களுக்குள் மரணத்திற்கு வழிவகுத்துள்ளது. சில வெள்ளெலிகளின் கண் இமைகளின் மேற்பரப்பில் சிரங்குகள் ஏற்பட்டு இறுதியில் அவற்றின் கண்பார்வை பறிபோயுள்ளது.

வெள்ளெலிகள் இறந்தவுடன், வைரஸின் தாக்கத்தை ஆய்வு செய்ய ஆராய்ச்சியாளர்கள் அவற்றின் உறுப்புகளை ஆராய்ந்து வருகின்றனர். இதயம், கல்லீரல், மண்ணீரல், நுரையீரல், சிறுநீரகம், வயிறு, குடல் மற்றும் மூளை உள்ளிட்ட முக்கியமான திசுக்களில் வைரஸ் குவிந்திருப்பதை கண்டறிந்துள்ளனர்.

வைரஸ் வெளியே பரவாமல் இருக்க தடுப்பு உத்திகளை மேற்கொள்வதாக சீன விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 2014 மற்றும் 2016க்கு இடையில் கடைசியாக எபோலா வைரஸ் பரவியது. இது பல மேற்கு ஆப்பிரிக்க நாடுகளை பாதித்து ஆயிரக்கணக்கான இறப்புகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.