;
Athirady Tamil News

வட கொரியா மீண்டும் உளவு செயற்கைக்கோள்?

0

வட கொரியா திங்கள்கிழமை ராக்கெட் ஒன்றை விண்ணில் செலுத்தியதாகவும், அதில் அந்த நாட்டின் 2-ஆவது செயற்கைக்கோள் இருந்திருக்கலாம் என்றும் தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

ராக்கெட் புறப்பட்ட 4 நிமிஷங்களில் அதன் சிதறல்கள் கடலின் மேற்பரப்பில் கண்டறியப்பட்டது. எனினும், தனது செயற்கைக்கோளை வட கொரியா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதா என்பது தெரியவில்லை என்று அவா்கள் கூறினா்.

முன்னதாக, இது குறித்து தங்களிடம் வட கொரியா முன்கூட்டியே எச்சரித்ததாக ஜப்பானும் கூறியிருந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.