;
Athirady Tamil News

நைஜீரியாவில் கிராமத்திற்குள் புகுந்து 150 பேரை கடத்திச் சென்ற பயங்கரவாதிகள்

0

நைஜீரியாவின் (Nigeria) நைஜர் மாகாணம் முன்யா நகரில் உள்ள கிராமத்திற்குள் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதலை மேற்கொண்டதில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக சர்தேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நைஜீரியாவின் குறித்த பகுதியில் உள்ள கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பண்டிட்ஸ் பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் நுழைந்தனர்.

இதன்போது, கிராமத்தில் இருந்த உணவு பொருட்கள், பணம் உள்ளிட்டவற்றை பயங்கரவாத கும்பல் கொள்ளையடித்துள்ளனர்.

தேடுதல் விசாரணை
இதனையடுத்து பயங்கரவாத கும்பலை தடுக்க முயன்ற கிராமத்தினர் 3 பேர், அரசு ஆதரவு பெற்ற ஆயுதக்குழுவினர் 4 பேர் என மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

பின்னர், கிராம மக்கள் 150 பேரை பயங்கரவாதிகள் கடத்தி சென்றனர். இதையடுத்து, அந்த கிராமத்திற்கு விரைந்து சென்ற பாதுகாப்புப்படையினர் கடத்தப்பட்டவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.