;
Athirady Tamil News

காணாமல் போன லொட்டரி சீட்டுக்கு கிடைத்த அதிஷ்டம் : இன்ப அதிர்ச்சியில் இளம் தாய்

0

இளம் தாய்ஒருவர் கொள்வனவு செய்த லொட்டரி டிக்கெட் காணாமல் போன நிலையில் அந்த டிக்கெட்டிற்கு இலங்கை மதிப்பில் கோடிக்கணக்கான பணம் விழுந்தமை அவரை மகிழ்ச்சியின் உச்சத்திற்கே கொண்டுபோய் சேர்த்துள்ளது.

இந்த சம்பவம் அமெரிக்கா(us)வின் விர்ஜீனியா பகுதியில் நடந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அமெரிக்காவை சேர்ந்த இளம் தாய் டியர்ரா பார்லி (Tierra Barley)லொட்டரி டிக்கெட்டை வாங்கிய பின்னர் தனது மகளுடன் பூங்காவிற்கு சென்று விளையாடி உள்ளார்.

காணாமல்போன டிக்கெட்
பின்னர் குறித்த லொட்டரி டிக்கெட்டை தேடிய போது அதனை காணாத நிலையில் அதிர்ச்சியடைந்த அவர் டிக்கெட் வாங்கிய கடையில் சென்று விசாரித்துள்ளார். அவரின் அதிஷ்டம் அந்த டிக்கெட் அங்கே இருந்துள்ளது.

பரிசுத் தொகை 50 ஆயிரம் டொலர்
தவறவிட்ட டிக்கெட்டை எடுத்துக்கொண்டு வீடு சென்றுள்ளார். இந்த நிலையில் அந்த டிக்கெட்டிற்கு 50 ஆயிரம் டொலர்கள் ( இலங்கை மதிப்பில் 1கோடியே 50 லட்சம்) பரிசு விழுந்தது அவருக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.