;
Athirady Tamil News

கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்து : 27 பேர் வைத்தியசாலையில் அனுமதி

0

கொழும்பு (Colombo) பதுளை (Badulla) பிரதான வீதியில் பெல்மடுல்ல நகரிற்கு 500 மீற்றர் தூரத்தில் தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தானது இன்று (29)காலை 6.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில், விபத்தில் 27 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீதி விபத்து
எம்பிலிப்பிட்டியவில் (Embilipitiya) இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று எதிர்திசையில் வந்த முச்சக்கரவண்டியுடன் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

வீதி விபத்து விபத்தைத் தடுக்க ஓட்டுநர் பேருந்தை வீதியில் இருந்து அகற்ற முயன்றபோது மண் தளர்வாக இருந்ததால் பேருந்து அருகிலுள்ள பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.

வைத்தியசாலை வட்டாரங்கள்
இந்த விபத்தில் படுகாயமடைந்த ஏழு பேர் ஆபத்தான நிலையில் இரத்தினபுரி பொது வைத்தியசாலையிலும் மற்றும் 20 பேர் கஹவத்தை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், விபத்தில் காயமடைந்த ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.