;
Athirady Tamil News

உயர்தரப் பரீட்சை பெறுபேறு வெளியாகும் திகதி: கல்வி அமைச்சர் அறிவிப்பு

0

நடைபெற்று முடிந்த 2023 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் (G.C.E A/L Exam) பெறுபேறுகள் இந்த மாதம் 31ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பெப்ரவரி மாதம் நான்காம் திகதி வரை இடம்பெற்றிருந்தது.

குறித்த உயர்தரப் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் 346,976 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

தோற்றிய பரீட்சார்த்திகள்
அவர்களில் 281,445 பாடசாலை பரீட்சார்த்திகளும், 65,531 தனியார் பரீட்சார்த்திகளும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள் தங்களுடைய பெறுபேறுகளை www.doenets.lk, www.results.exams.gov.lk என்ற பரீ்ட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களுக்கு சென்று பார்வையிட முடியும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.