;
Athirady Tamil News

140 பேரை ஏமாற்றிய மூவர்; சுற்றிவளைத்த பொலிஸார்

0

ரஷ்யாவுக்கு அனுப்புவதாகக் கூறி 140 பேரை ஏமாற்றி பணம் பெற்ற மூவர் மொரட்டுவை தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சாரதி பயிற்சி நிலையத்தை நடத்துவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

. பொலிஸார் சோதனையிட்ட போது வெவ்வேறு நபர்களின் 39 கடவுச்சீட்டுகள் மற்றும் போலி ஆவணங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

சாரதி பயிற்சி நிலையத்தை நடத்தும் பிரதான சந்தேகநபர் மற்றும் ஏனைய சந்தேக நபர்கள் ஒருவரிடமிருந்து 06 இலட்சம் முதல் 14 இலட்சம் வரை பணம் பெற்றுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ளவர்கள் இந்த மோசடியில் சிக்கியுள்ளதுடன் இது தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடுகளையும் வழங்கியுள்ளனர் .

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கட்டுபெத்த மொரட்டுவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.