;
Athirady Tamil News

தென்கொரியாவில் கழிவுகளுடன் தரையிறங்கிய 200 ற்கும் மேற்பட்ட பலூன்கள்

0

தென் கொரியாவின் பல்வேறு இடங்களில் கழிவுகளுடன் சுமார் 260 பலூன்கள் தரையிறங்கியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த பலூன்கள் வடகொரியாவில் இருந்து அனுப்பப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதாகவும், தென்கொரிய அதிகாரிகள் பலூன்கள் விழுந்த பகுதிகளில் உள்ளவர்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறும் பலூன்களை தொடுவதை தவிர்க்குமாறும் அறிவித்துள்ளனர்.

வெள்ளை நிற பலூன்கள் தரையிறங்கியுள்ளதாக
தென்கொரியாவின் 8 அல்லது 9 மாநிலங்களில் வெள்ளை நிற பலூன்கள் தரையிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலூன் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.