;
Athirady Tamil News

கனடாவில் அதிகரிக்கும் மரணங்கள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

கனடாவில் (Canada) நீரில் மூழ்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒன்றாரியோ (Ontario) மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தக் கோடை காலத்தில் மக்கள் கூடுதல் அவதானத்துடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

உயிரிழப்புக்கள்
சில நொடிகளில் ஒருவர் நீரில் மூழ்கி மரணிக்கக் கூடும் எனவும் இதனால் அவதானத்துடன் இருக்க வேண்டியது அவசியமானது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டில் மாகாணத்தில் 211 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.