;
Athirady Tamil News

மீண்டும் அத்துமீறிய ஈரான் படை : பாகிஸ்தானில் நால்வர் பலி

0

பாகிஸ்தான் (Pakistan) எல்லையில் அமைந்துள்ள பலுசிஸ்தானில் ஈரான் (Iran) அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவம் நேற்று (29) நள்ளிரவு தெஹ்சில் மஷ்கில் பச்சா ராய் என்ற இடத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, மேலும் இரண்டு பேர் காயம் அடைந்துள்ளனர் என பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.

துப்பாக்கிச்சூடு
பலுசிஸ்தான் துணை இராணுவப் படை அதிகாரிகள் தாக்குதல் தொடர்பாக ஈரான் இராணுவத்திடம் விளக்கம் கேட்டுள்ளனர். ஆனால், ஈரான் அதிகாரிகள் இது தொடர்பாக விளக்கம் அளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஈரான் படைகள் ஏன் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள் என்பதற்கான காரணம் தெரியவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வான் தாக்குதல்

கடந்த ஜனவரி மாதம் பாகிஸ்தான் எல்லையில் பலுசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறி ஈரான் வான் தாக்குதல் நடத்தியது.

அதற்கு பதிலடியாக ஈரான் எல்லையில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறி பாகிஸ்தானும் தாக்குதல் நடத்தியது. பின்னர் இருநாட்டு இராஜதந்திரம் மூலமாக பதற்றத்தை கட்டுப்படுத்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.