;
Athirady Tamil News

இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். ஐ.எஸ் பயங்கரவாதிகள்: விசாரணையில் சிக்கிய மேலும் இரு இலங்கையர்கள்

0

ஐ.எஸ். ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பைப் பேணிய இலங்கையர்களின் கைது விவகாரம் குறித்து மேற்கொண்ட விசாரணையில், மேலும் இரண்டு பேர் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்டப்டுள்ளனர்.

பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசேட விசாரணையில் குறித்த இருவரும், இந்தியாவில் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்களுடன் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சந்தேகநபர்கள் மாவனெல்லை – ஹிகுல மற்றும் மாவனெல்லை – புதிய நகரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என கூறப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடுப்பு பிரிவு
இதேவேளை இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பைப் பேணிய மேலும் இரண்டு பேர் சிலாபம் – பங்கதெனிய பகுதியில் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பயங்கரவாதத் தடுப்பு பிரிவினால் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் சகோதரர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.