;
Athirady Tamil News

கீழே கிடந்த பணத்தை பொலிஸிடம் ஒப்படைத்த முதியவர்.., குவியும் பாராட்டுகள்

0

சாலையோரம் கிடந்த பணத்தை பொலீஸில் ஒப்படைத்த முதியவரை அழைத்து காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பணத்தை ஒப்படைத்த முதியவர்
சென்னை நந்தம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சங்கரன் (69). இவர், கடந்த 26 -ம் திகதி புனித தோமையர் மலை, ஓடிஏ ருத்ரா சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார்.

அப்போது, சாலையில் கவர் ஒன்று கிடந்துள்ளது. அதனை பார்த்த போது உள்ளே ரூ.ரூ.37,500 இருந்துள்ளது. உடனே, அந்தப் பணத்தை புனித தோமையர் மலை (பரங்கிமலை) காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

இந்நிலையில், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் சிசிடிவி காமெராக்களை பார்த்து பணம் யாருடையது என்று விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த முதியவர் சங்கரனின் நேர்மையை அங்கீகரிக்கும் விதமாக, சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அவரை நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.