;
Athirady Tamil News

உலகின் முதலாவது மர செயற்கைகோளை உருவாக்கியுள்ள ஜப்பான்

0

உலகின் முதல் மர செயற்கைக்கோளை ஜப்பான் (Japan) விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த செயற்கைக்கோளை கியோட்டோ பல்கலைக்கழகம் மற்றும் சுமிட்டோமோ பாரெஸ்ட்ரி நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகளே தயாரித்துள்ளனர்.

சோதனை முறையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோளின் ஒவ்வொரு பக்கமும் 10 சென்டி மீற்றர் (4 அங்குலம்) அளவைக் கொண்டுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயற்கைக்கோள்
லிக்னோசாட் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள் வருன்கிற செப்டம்பர் மாதம் விண்ணில் ஏவப்படுவதுடன் லிக்னோசாட் செயற்கைக்கோள் மக்னோலியா மரத்தினால் செய்யப்பட்டதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளிபுறத்தில் சூரிய மின் தகடுகள் பொருத்தப்பட்டு கட்டமைக்கப்பட்டுள்ளதுடன் லிக்னோசாட் திட்டம் சுற்றுச்சூழலுக்கு உகந்தவாறு விண்வெளியை மேம்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.