;
Athirady Tamil News

ஜம்மு- காஷ்மீர் பேருந்து விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு நிதியதவி அறிவிப்பு!

0

ஜம்மு- பூஞ்ச் நெடுஞ்சாலையில் 150 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானோரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி அளிப்பதாக பிரதமர் அலுவலகம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

இது குறித்து எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில், அக்னூரில் ஏற்பட்ட விபத்தில் பலியானவர்கள் குறித்து வேதனையடைவதாகவும் அவர்களை இழந்தவர்கள் உடன் நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமுற்றவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான பேருந்தில் மீட்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்

விபத்தில் பலியானோரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும் காயமுற்றவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரண உதவியாக அளிக்கவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஆன்மிக சுற்றுலாவுக்காக வந்த பயணிகளின் பேருந்து விபத்துக்குள்ளானதில் பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளதாகவும் பலர் காயமுற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.