;
Athirady Tamil News

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அட்டகாசம் செய்த இளைஞனுக்கு நேர்ந்த கதி!

0

யாழ் போதனா வைத்தியசாலைக்குள் மோட்டார் சைக்கிளுடன் நுழைந்து அட்டகாசம் செய்த நபர் தற்போது சிகிச்சைக்காக அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்று முன்தினம் (28-05-2024) வாள்வெட்டு காயத்திற்கிலக்கான தனது நண்பனை மோட்டார் சைக்கிளில் ஏற்றிகொண்டு வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவுக்குள் மோட்டார் சைக்கிளுடன் புகுந்துள்ளார்.

இது தொடர்பில் கேள்வியெழுப்பிய வைத்தியசாலை உத்தியோகத்தரையும் தாக்கியுள்ளார்.

இதனையடுத்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், குறித்த நபரை மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், சிறைச்சாலையில் இருந்த ரௌடி தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சமயத்தில் முறையாக கவனிக்கப்பட்டதாலேயே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.