;
Athirady Tamil News

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகலாம் – பரீட்சை திணைக்களம்

0

2023 ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் (G.C.E A/L Exam) பெறுபேறுகள் இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பரீட்சை திணைக்களம்
2023 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை 2024 ஆம் ஆண்டு ஜனவரி 04 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, பெப்ரவரி முதலாம் திகதி வரை நடைபெற்றது.

குறித்த பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் 281,445 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 65, 531 தனியார் விண்ணப்பதாரர்களும் தோற்றியிருந்தனர்.

உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எப்போது வெளியிடப்படும் என்ற சிக்கல் இருந்த போதிலும், அவ்வப்போது பரீட்சை திணைக்களமானது வெளியிடப்படும் திகதிகள் குறித்து தகவல் வெளியிட்டுக் கொண்டிருந்தது.

அந்தவகையில் கடந்த வாரத்தில் வந்த தகவலின் படி, மே மாத இறுதி வாரத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று மே மாத்தின் இறுதி நாளான 31 ஆம் திகதி குறித்த பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.