;
Athirady Tamil News

புத்தளத்தில் மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவன் பரிதாபம மரணம்!

0

புத்தளத்தில் (Puttalam) முடி உலர்த்தி (hair dryer) மூலம் முடியை உலர வைத்த போது மின்சாரம் தாக்கி மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த அனர்த்தம் நேற்று (30) காலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

புத்தளம், ஐந்தாம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த 17 வயதுடைய துவான் சலீம் முஹம்மது சஹ்ரான் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதி
குறித்த மாணவன் நேற்று தனது வீட்டில் குளித்து விட்டு முடி உலர்த்தி மூலம் முடியை உலர வைத்த சந்தர்ப்பத்திலேயே மின்சார தாக்குதலுக்கு உள்ளானதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, குறித்த மாணவனை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

சாதாரண தரப் பரீட்சையில் தோற்றியிருந்தவர்
வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை குறித்த மாணவன் இம்முறை நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.