;
Athirady Tamil News

இந்தியாவில் திடீர் மரணத்தை ரசித்த பார்வையாளர்கள் : பின்னணியில் வெளியான அதிர்ச்சி

0

இந்திய மத்திய பிரதேஸ் மாநிலத்தில் யோகா வகுப்பு ஒன்றில், பயிற்றுவிப்பாளர் மேடையில் வீழ்ந்து இறந்தபோதும், பங்குபற்றுனர்கள் கரகோசத்தை இடைவிடாமல் தொடர்ந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது

குறித்த பயிற்றுவிப்பாளர், மேடையில் நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்தபோது மண்டபத்தில் அமர்ந்திருந்த மாணவர்கள் அவரை உற்சாகப்படுத்தும் வகையில் கரகோசம் செய்தனர்.

இந்த கரகோசம் தொடர்ந்தும் கொண்டிருக்கும் நிலையிலேயே பயிற்றுவிப்பாளர் தடுமாறி கீழே வீழ்ந்துள்ளார்.

பரவும் காணொளி
எனினும் இதனையும் குறித்த பயிற்சியாளரின் நிகழ்ச்சியாக இருக்கும் என்று நினைத்த மாணவர்கள் எவ்வித சந்தேகமும் இன்றி கரகோசத்தை தொடர்ந்தனர்.

இந்தநிலையில் சிறிது நேரமாக பயிற்றுவிப்பாளர் எழுந்திருக்காமையை அடுத்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் அருகில் சென்று பார்த்தபோதே பயிற்றுவிப்பாளர் இறந்து விட்டமை தெரியவந்தது

இது தொடர்பான காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.