;
Athirady Tamil News

A/L பரீட்சை பெறுபேறுகள்; நாடளாவிய ரீதியில் முதலிடத்தை பிடித்த மாணவர்கள்!

0

2023 (2024) ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று  பிற்பகல் வௌியிடப்பட்ட நிலையில் நாடளாவிய ரீதியில் முதலிடத்தை பிடித்த மாணவர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளது.

வெளியான பெறுபேறுகளுக்கு அமைய அறிவியல் பாடத்தில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை காலி சங்கமித்த பாலிகா வித்தியாலயத்தைச் சேர்ந்த பஹன்மா உபனி லெனோரா பெற்றுள்ளார்.

அதேபோல், பௌதீக விஞ்ஞான பிரிவில் கொழும்பு ஆனந்தா கல்லூரியை சேர்ந்த W.A சிரத் நிரோதா முதலிடத்தை பெற்றுள்ளார்.

பரீட்சை பெறுபேறுகளை doenets.lk/examresults என்ற இணையத் தளப் பக்கத்தில் அறிந்து கொள்ள முடியும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.