;
Athirady Tamil News

வணிகவியலில் யாழ். இந்து மகளிர் மாணவி மாவட்ட நிலையில் முதலிடம்!

0

நேற்று வெளியாகிய க.பொ.த உயர்தரப் பரீட்சையில் வணிகவியலில் யாழ். இந்து மகளிர் கல்லூரி மாணவி கிர்த்திகா பத்மலோஜன் யாழ். மாவட்டத்தில் முதல் நிலையைப் பெற்றிருக்கிறார்.

யாழ். இந்து மகளிர் கல்லூரியில் இருந்து பரீட்சைக்குத் தோற்றியவர்களில் 90 மாணவிகள் விஞ்ஞான, கலை, வணிகவியல் துறைகளில் சிறப்புப் பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறுகின்றனர்.

வணிகவியலில் முதலாம் நிலை மற்றும் கலைத் துறையில் ஐந்தாம் இடம் உட்பட 24 பேர் 3ஏ சித்திகளையும், 18 பேர் 2ஏ,பி சித்திகளையும், 6 பேர் 2ஏ, சீ சித்திகளையும் பெற்றுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.