;
Athirady Tamil News

நூற்றுக்கணக்கான பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்!

0

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று (31) வெளியாகியிருந்த நிலையில் 190 பரீட்சார்த்திகளின் பரீட்சைப் பெறுபேறுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை பரீட்சைகள் திணைக்களம் இன்று (01) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

146 பாடசாலை பரீட்சாத்திகளுடையதும் மற்றும் 44 தனியார் பரீட்சாத்திகளுடையதுமான பெறுபேறுகளே இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சை
இந்த நிலையில், இரண்டு இலட்சத்து 69 ஆயிரத்து 613 பேர் பரீட்சைக்குத் தோற்றிய நிலையில் ஒரு இலட்சத்து 73 ஆயிரத்து 444 பேர் பல்கலைக்கழகத்துக்கு தகுதி பெற்றுள்ளனர்.

மேலும், இதேவேளை பரீட்சை மீளாய்வு செய்வதற்காக எதிர்வரும் ஐந்தாம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியுமெனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.