;
Athirady Tamil News

இந்தியாவின் பல பகுதிகளில் கடும் வெப்பம்..! 24 மணி நேரத்தில் பலர் உயிரிழப்பு

0

இந்தியாவில் (india) கடந்த 24 மணி நேரத்தில் கடும் வெப்பம் காரணமாக 85 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடும் வெப்ப அலை காரணமாக, பகல் பொழுதில் வீடுகளில் இருந்து வெளியே வர வேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஒடிசா, பீகார், ஜார்க்கண்ட், இராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

வெப்பத் தாக்குதலுக்கு உயிரிழப்பு

கடந்த சில நாட்களாக கடுமையான வெப்ப அலை வீசி வரும் இதேவேளை, பீகார் மாநிலத்தின் பல பகுதிகளில் 44 டிகிரி செல்சியசை கடந்து வெப்பம் பதிவாகி வருகிறது.

வெப்பத்தின் தாக்கத்தால் மக்கள் வெளியே நடமாட முடியாத சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், பீகாரில் கடந்த 24 மணி நேரத்தில் 10 தேர்தல் பணியாளர்கள் உட்பட 16 பேர் வெப்பத் தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பீகார் மாநிலத்தில் வெப்பம் காரணமாக அனைத்து பாடசாலைகள், பயிற்சி நிறுவனங்கள் மற்றும் முன்பள்ளிபாடசாலைகள் வருகிற 8 ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.