;
Athirady Tamil News

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

0

சீனாவிலுள்ள (China) நகரமொன்றில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

தென்மேற்கு சீனாவின் ஜிசாங் தன்னாட்சிப் பகுதியில் உள்ள நகு நகரின், நைமா கவுண்டியில் நேற்று (01) திடீரெனெ நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கமானது 5.9 ரிக்டர் அளவில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு அட்சரேகை
இதனடிப்படையில், 34.14 பாகை வடக்கு அட்சரேகை (North Latitude) மற்றும் 86.36 பாகை கிழக்கு தீர்க்கரேகையில் நிலநடுக்கம் கண்காணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் 8 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம் (China Earthquake Networks Center) தெரிவித்துள்ளது.

எனினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.