;
Athirady Tamil News

இலங்கை வரலாற்றில் ஏற்றுமதி துறையில் ஏற்பட்டுள்ள பெரும் இழப்பு: தடுமாறும் பொருளாதாரம்

0

இலங்கையில் தேயிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக கடந்த பத்து வருடங்களில் 51150 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

நாட்டின் வரலாற்றில் அதிகூடிய தேயிலை உற்பத்தி 2013 ஆம் ஆண்டு பதிவாகியுள்ளதாகவும், அது 34000 மெற்றிக் தொன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேயிலை உற்பத்தி 2015 இல் 328800 மெற்றிக் தொன்களாலும், 2020 இல் 278489 மெற்றிக் தொன்களாலும், 2023 இல் 256039 மெற்றிக் தொன்களாலும் குறைந்துள்ளதாக பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

தேயிலை ஏற்றுமதி வீழ்ச்சி

எமது ஏற்றுமதி 2013 இல் 319700 மெற்றிக் தொன்களாலும், 2015 இல் 306900 மெற்றிக் தொன்களாலும், 2020 இல் 265569 மெற்றிக் தொன்களாலும், 2023 இல் 241912 மெற்றிக் தொன்களாலும் குறைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தேயிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வீழ்ச்சியினால் ஏற்படும் இழப்பு சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொகையில் 75 வீதத்திற்கு சமம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தற்போது தேயிலை ஏற்றுமதி 24 வீதத்தால் குறைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.