;
Athirady Tamil News

யாழ்.இளைஞனிடம் மோசடியில் ஈடுபட்ட நீர்கொழும்பு மதபோதகர் கைது

0

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரை வெளிநாடு ஒன்றிற்கு அனுப்பி வைப்பதாக கூறி 15 இலட்ச ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் , நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த மதபோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொடிகாமம் பகுதியை சேர்ந்த இளைஞனை வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி 15 இலட்ச ரூபாய் பணத்தினை மத போதகர் பெற்றுள்ளார்.

நீண்ட நாட்கள் ஆகியும் வெளிநாட்டு பயணம் சரி வராததால் , கொடுத்த பணத்தினை இளைஞன் திருப்பி கேட்ட போது , போதகர் காசோலையை வழங்கியுள்ளார்.

காசோலையை வங்கியில் வைப்பு செய்த போது கணக்கில் பணம் இல்லை என காசோலை திரும்பியுள்ளது. அதை அடுத்து போதகரை இளைஞன் தொடர்பு கொண்டு கேட்ட போது, தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாகவும் , தன்னால் என்னவும் செய்ய முடியும் என இளைஞனை மிரட்டியுள்ளார்.

அதனை அடுத்து இளைஞன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து , விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , நீர்கொழும்பில் வைத்து போதகரை கைது செய்து யாழ்ப்பாணம் அழைத்து வந்தனர்.

யாழ்ப்பாணத்தில் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் போதகரை முற்படுத்திய போது , அவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.