;
Athirady Tamil News

ஜனாதிபதி தேர்தலில் ரணிலின் முதல் நகர்வு : பிரசாரப் பணிகள் ஆரம்பம்

0

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தை இந்த மாதம் முதல் ஆரம்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் பிரசாரப் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகின்றது.

தொகுதி அடிப்படையில் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்வதுமுதல் மாவட்ட ரீதியில் பிரதான பிரச்சாரக் கூட்டங்களை நடத்தும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆளும் கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்களுக்கு முக்கிய பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.