;
Athirady Tamil News

நகைக்கடை உரிமையாளரை கல்முனை ஆதார வைத்தியசாலையில் கைது செய்த பொலிஸார்

0

கட்டடம் ஒன்றினை நிர்மாணிப்பதில் ஏற்பட்ட முரண்பாட்டினால் தலைமறைவாகி இருந்த நகைக் கடை வர்த்தகரை கல்முனை தலைமையக பொலிஸாரினால் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவத்தில் ஏற்பட்ட கைகலப்பினால் இளைஞன் காயமடைந்த நிலையில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த இளைஞனை தாக்கிய சந்தேக நபரான நகைக்கடை உரிமையாளர் தலைமறைவாகி தானும் தாக்கப்பட்டதாக கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக விடுதி 7 இல் தங்கி இருந்த போது அங்கு சென்ற கல்முனை தலைமையக பொலிஸார் சந்தேக நபரான நகை கடை வர்த்தகரை கைது செய்துள்ளதுடன் தற்போது வைத்தியசாலையில் பொலிஸாரின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் புதிதாக கட்டடம் ஒன்றினை நிர்மாணிப்பதற்கு உரிய அனுமதியினையும்இ நடைமுறைகளையும் பின்பற்றி ஒரு சாரார் கட்டடம் ஒன்றினை நிர்மாணித்து வந்துள்ளனர். இந்நிலையில் குறித்த கட்டடம் உரிய அனுமதி பெறாமல் கட்டப்படுகின்றது என குறிப்பிட்டு அருகில் உள்ள நகைக் கடை உரிமையாளர் ஒருவர் தனது குழுவுடன் தொடர்ச்சியாக தடை ஏற்படுத்தி புகைப்படம் எடுத்து அச்சுறுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை(30) மாலை கட்டடம் அமைத்து வந்த தரப்பினரின் சார்பில் அங்கு வேலை செய்கின்ற 18 வயது மதிக்கத்தக்க முஹம்மட் நசார் முகமட் ஆதிக் என்ற இளைஞனே நகைக்கடை உரிமையாளர் குழவினரால் தாக்கப்பட்டிருக்கின்றார். இதனை அடுத்து குறித்த தாக்குதலில் காயமடைந்த அவ்விளைஞன் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் குறித்த தாக்குதலில் ஈடுபட்ட நகை கடை உரிமையாளர் என கூறப்படுபவரும் தானும் தாக்கப்பட்டதாக கூறி கல்முனை ஆதார வைத்தியசாலையின் 7 ஆவது விடுதியில் சிகிச்சை பெற்று வருகின்றார். இவரின் நிலைமை பாரதூரமாக இல்லாத போதிலும் அவ்வைத்தியசாலையில் கடமையாற்றும் உறவினரான வைத்தியர் கடந்த கால காய நிலைமையை காட்டி கல்முனை தலைமையக பொலிஸாரின் விசாரணைகளுக்கு தடைகளை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டிருந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்ததுடன் இன்று (31) மாலை இளைஞனை தாக்கிய நகைக்கடைக்காரரை கல்முனை ஆதார வைத்தியசாலையில் வைத்து கைது செய்துள்ளனர். குறித்த சம்பவத்தில் கைதான சந்தேக நபரை சட்ட நடவடிக்கைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு கல்முனை தலைமையக பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.