;
Athirady Tamil News

மண்சரிவு அபாயம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட பெலவத்தை- நெளுவை வீதி

0

மண்சரிவு அபாயம் காரணமாக பெலவத்தை – நெளுவை பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

நாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக காலி மாவட்டத்தின் வலல்லாவிட பிரதேச செயலகப் பிரிவில் வௌ்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

மாற்று வழிகள்
அதன் காரணமாக பெலவத்தை – நெளுவை பிரதான வீதியில் இரண்டாம் மைல் போஸ்ட் அருகே வீதியில் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது. அப்பிரதேசத்தில் பாரிய மண்சரிவு அபாயம் எதிர் கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து பெலவத்தை – நெளுவை பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் முடிந்தவரை மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.