;
Athirady Tamil News

குடும்பநல உத்தியோகஸ்தர்களின் வெற்றிடங்களை நிரப்புங்கள்

0

சங்கானை பிரதேசத்தில் 18 குடும்பநல உத்தியோகஸ்தர்கள் கடமையாற்ற வேண்டிய நிலையில் 12 உத்தியோகஸ்தர்களே கடமையாற்றுவதால் , சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆளணி பற்றாக்குறை நிலவுவதால் , சேவைகளை வினைத்திறனுடன் ஆற்றவதில் , சேவையில் உள்ள உத்தியோகஸ்தர்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

அதனால் குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்களின் நலன்கள் கேள்விக்குள்ளாகும் நிலைமைகள் காணப்படுவதனால் , பணி வெற்றிடங்களை நிரப்புவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.