;
Athirady Tamil News

சாவகச்சேரியில் கிணற்றினுள் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

0

வீட்டு கிணற்றில் தண்ணீர் அள்ள முயன்ற 06 வயதான சிறுவன் , கிணற்றினுள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளான்.

யாழ்ப்பாணம் , சாவகச்சேரி பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் ஹரிஸ்ராஜ் எனும் சிறுவனே உயிரிழந்துள்ளான்.

சிறுவனின் பெற்றோர் பணி நிமித்தம் வெளியே சென்ற வேளை, சிறுவன் கிணற்றில் தண்ணீர் அள்ள முயன்ற வேளை “கப்பி ” கயிறு அறுந்தமையால் சிறுவன் கிணற்றினுள் விழுந்த நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.