கெஹலியவிற்கான பிணை மனு மீண்டும் நிராகரிப்பு
![](https://www.athirady.com/wp-content/uploads/2024/06/Screenshot-2024-06-03-172207-663x430.jpg)
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella) உள்ளிட்ட 8 பேரை ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தரமற்ற இம்யூனோகுளோபுலின் (Immunoglobulin) மருந்துகளை இறக்குமதி செய்தமை தொடர்பான வழக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (3) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சரீர பிணைகள்
இந்நிலையில், இந்த வழக்கின் 4 ஆவது சந்தேக நபர் 5 இலட்சம் ரூபா இரண்டு சரீர பிணைகள் மற்றும் ஒரு இலட்சம் ரூபா ரொக்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இவ்வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களில் ஒருவர் கடந்த மே மாதம் 06ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.