;
Athirady Tamil News

கொழும்பு சென்றுகொண்டிருந்த ரயிலில் திடீர் தீ!

0

பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த திடீரென தீப்பிடித்ததால் பரப்ரப்பு ஏற்பட்டது.

இன்று திங்கட்கிழமை (03) பகல் வேளையில் கொழும்புக்கு வந்துகொண்டிருந்த பொடி மெனிக்கே கடுகதி ரயிலின் இயந்திரத்தில் திடீரென தீப்பிடித்துள்ளது.

ஹப்புத்தளை ரயில் நிலையத்தில் ரயிலின் பின் புறத்திலுள்ள இயந்திரத்தில் தீப்பிடித்துள்ளது.

ஹப்புத்தளை ரயில் நிலைய ஊழியர்கள் மற்றும் பொலிஸார் பிரதேசவாசிகளின் உதவியுடன் தீயை அணைத்துள்ளனர்.

இந்நிலையில், ரயில் பயணம் இரண்டு மணித்தியாலங்கள் தாமதமடைந்துள்ளது. எனினும் இந்த தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.