;
Athirady Tamil News

இந்தியாவில் இருந்து தலைமன்னாருக்கு சட்டவிரோதமாக வருகை தந்த ஐவர் கைது

0

இந்தியாவில் இருந்து சட்ட விரோதமான முறையில் படகில் தலைமன்னார் ஊர்மனை பகுதிக்கு வருகை தந்த இலங்கையைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐவரும் தலைமன்னார் ஊர்மனை கடற்கரை பகுதியில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த 5 நபர்கள் கடற்படையினரால் விசாரணைக்கு உற்படுத்திய பின்னர் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் தாழ்வுபாடு,தலைமன்னார்,வவுனியா,கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 37,39,24,26 மற்றும் 38 வயதுடைய ஆண்கள் என தெரியவந்துள்ளது.

குறித்த 5 பேரும் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடந்த சில வருடங்களுக்கு முன் சென்றுள்ள நிலையில் இந்தியாவின் பல்வேறு இடங்களில் வசித்து வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

5 சந்தேகநபர்களும் தற்போது தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதோடு, விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.