;
Athirady Tamil News

வெளிநாடொன்றில் விமான சாகச நிகழ்ச்சியில் பயங்கரம்: பார்வையாளர்கள் அதிர்ச்சி

0

விமானங்கள் நடத்திய சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட விபத்தில் விமானி ஒருவர் உயிரிழந்தமை பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

போர்த்துகல் (portugal) நாட்டின் தெற்கு பகுதியில் பெஜா விமான நிலையத்தில் நேற்று முன் தினம் (02) இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஒரே நேரத்தில் 6 சிறிய ரக விமானங்கள்
பெஜா விமான காட்சி என்ற பெயரில் இந்த விமான சாகச கண்காட்சி நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில், 6 சிறிய ரக விமானங்கள் யாக் ஸ்டார்ஸ் என்ற பெயரில் வரிசையாக வானில் பறந்து சென்றன.

எவரும் எதிர்பாராத வகையில்
அப்போது, எவரும் எதிர்பாராத வகையில், விமானம் ஒன்று மேலே எழும்பி சென்று மற்றொரு விமானத்தின் மீது மோதி விட்டு தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில், விமானி ஒருவர் பலியானார்.

இதனை தொடர்ந்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உடனடியாக அந்த நிகழ்ச்சியை இரத்து செய்தனர். அவசரகால சேவை துறையினரும் மீட்பு பணிக்காக உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்றனர் என விமானப் படை தெரிவித்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.