;
Athirady Tamil News

யாழில் மழை வீழ்ச்சி

0

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நயினாதீவிலேயே நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் நேற்று திங்கட்கிழமை வரையான 24 மணிநேரத்தில் கூடுதலான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 24 மணி நேரத்தில் யாழ். மாவட்டத்தில் நயினாதீவில் அதிகூடிய மழை வீழ்ச்சியாக 58.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் திருநெல்வேலி வானிலை அவதான நிலையத்தினர் தெரிவித்தனர்.

யாழ். மாவட்டத்தில் யாழ்ப்பாணம் கோட்டையில் 43.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், நெடுந்தீவில் 43.1 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், யாழ். நகரில் 34.6 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், பருத்தித்துறையில் 32.0 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், திருநெல்வேலியில் 29.3 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாகத் திருநெல்வேலி வானிலை அவதான நிலையத்தினர் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.