;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்தில் தாயொருவர் பொலிஸாரிடம் விடுத்த கோரிக்கை; மகனுக்கு மறுவாழ்வு

0

யாழ்ப்பாணத்தில் போதைக்கு அடிமையான மகனை , அதிலிருந்து மீட்டு தருமாறு தாயார் கோரியதை அடுத்து, இளைஞன் நீதிமன்றின் ஊடாக புனர்வாழ்வு முகாமிற்கு பொலிஸார் அனுப்பி வைத்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெறுள்ளது.

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் தாயொருவரே இவ்வாறு பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகின்றது. தனது மகன் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார்.

அவரை அந்த பழக்கத்தில் இருந்து மீட்டு தருமாறு மானிப்பாய் பொலிசாரிடம் கோரியுள்ளார்.

தாயின் கோரிக்கையை அடுத்து இளைஞனை கைது செய்த பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தி , நீதிமன்றின் ஊடாக கந்தக்காடு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.